PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, July 22, 2006

ஞான(ம்) தரு(ம்)

குறிப்பு :முத்தமிழ்/நம்பிக்கை மஞ்சூர் ராசா அவர்கள் , ஒருவர் மரத்தடியில் அமர்ந்து ஏதோ ஒரு காகிதம்/புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, கவிதை எழுதச் சொன்னார். நான் என் பங்குக்கு எழுதிய கவிதை இது :)

########################

புத்தகத்தைப் படித்து
நாம் புலவன் ஆகலாம் -ஆனால்
புத்தனாக முடியா தென்பதை
புரிந்து கொள் நண்பா!

இச்சையில் மனம் லயித்தால்
எச்செகத்திலும் முக்தி இல்லை
நற்கதி வேண்டுமெனில்
நமைப் படைத்தோனை நாடிச் செல்

ஓய்ந்து போகாதே எழுந்து நில்
ஒழுக்கம் பேண் - எந்நேரமும்
அவன் நினைப்புடன்
கர்மாவைச் செயலாற்று!

விதைக்குள் இருந்து
வந்த இவ்விருட்சம் - நாம்
பிழைக்கும் வழியைச்
சொல்கிறது கேட்போம்!

வயது போனாலும் வாடாமல்
நாடி நரம்பு முறுக்கேற்றி
இறை(ரை)யைத் தேடி
இசை பரப்பும்

இதனின் கொள்கை
நாம் அறிவோம்- அது
உணர்த்தும் உண்மை
நாம் அறிவோம்!

விண்ணில் மண்ணில்
அணு வெளியில்
உன்னில் என்னில்
தரு தன்னில்

எங்கே இருக்கிறான்
அவன் என்ற
ஆத்ம ஞானத்தில்
தலை அசைக்கிறது.

தன்னை அறிவதற்கே
தலைவனை உணர்வதற்கே
குருவாய் ஆனவனை -இத்
தரு தியானித்து

ஒற்றைக் காலிலேயே
நின்றபடி செய்யும் தவம்
கண்டபின்னும் தாமதித்தல்
சரியாமோ? நீயே சொல்!

ஞானியாம் இத்தருவின்
நற்கொள்கை நாமும் கொள்வோம்
தோணியாய் ஏணியாய்
நல்லோர்க்கு நாம் இருப்போம்.

இறை வேட்கை கொண்ட
இவ் விருட்சம்
இதமாய் நமக்கு நிழல்
தருவது போல்

பிறர் பிழையைப்
பொறுத்து முயற்சிப்போம்
முதலில் நம்மை நாமே
தயார் செய்வோம்

வேர் போல்
விருப்பம் கொண்டு
உயரும் கிளைபோல் முயற்சித்தால்
கனிபோல் வெற்றி கிட்டும்
நிழல்போல் நிம்மதியாகும்.

0 Comments:

Post a Comment

<< Home