மனம் என்பது...
ஜெயமே ஜெயம் - 3
மனம் பற்றி அறியும் முன், நாம் உண்மையிலேயே மனம் திறந்து அதைப்பற்றி அறியத்தயாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மூன்று வகை மனம் பற்றி நாம் அறிவோம்.
1. தனிமனம்
2. ஆழ்மனம்
3. பிரபஞ்ச மனம்.
இதைப்பற்றி சுருக்கமா சொல்லுறதுங்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். பயிற்சி மூலமாகத்தான் இதை உணரமுடியுமே தவிர வெறும் படிப்பு மூலமா உணர முடியாதுதான் . இருந்தாலும் மேலோட்டமா இப்ப தெரிஞ்சுக்கிட்டா பின்னாளில் உபயோகப்படும். அதுசரி! எல்லோர்க்கும் பள்ளியில் இதைப் போன்ற அனுபவம் வெவ்வேறாய் இருந்திருக்கும்.
ஆசிரியர்: என்னடா நான் சொன்னது காதுல நுழைஞ்சிச்சா?
மாணவன்: சார்! வால் மட்டும் நுழையிலே சார்!
ஆசிரியர்: ???? :-(
தனிமனம் என்பது conscious mind/state.. நாம இப்போ நினைச்சிட்டு இருக்கிறது. உதாரணமா இந்த நிமிஷம் இதைப்படிச்சிட்டு இருக்கும் போதே நம்ம சிந்தனை வீட்டை நோக்கிப் போகும் ...
"ஆபீஸ் விட்டு வரும்போது டெய்லர் கடையில தைக்க கொடுத்த துணியை வாங்கிட்டு வந்திடுன்னு அம்மா சொன்னாங்களே... "
"போன வெள்ளிக்கிழமை மீனா என்னைப் பார்த்து சிரிச்சாளே :) எதுக்கு சிரிச்சா? அதுவா இருக்குமோ?"
"சேச்சே நம்ம PL -லோட பெரும் ரோதனையா போய்ச்சே , மனுசன் பிராணனை வாங்குறானே!"
இப்படியாக நமது சிந்தனை ஒரு ரவுண்ட அடித்தபடியே இருக்கும். அதே சமயம் உங்கள் வேலையையும் கவனித்து கொள்வீர்கள். இந்தக் கட்டுரையையும் படித்துக் கொள்வீர். இன்னும் அழகாகச் சொல்லப்போனால் உணர்வு நிலையில் உள்ள மனம் அல்லது விழிப்புநிலை எனலாம். நமது ஐம்புலங்களின் செயல்பாட்டுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
அதே சமயம் இவங்களுக்கெல்லாம் கெட் ஆபீஸ், நம்ம கேப்டன் மூளைதான். மனசு பற்றி பேசும் போது மூளை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்த ஐம்புலங்களின் உணர்வுகளின் தகவலைப்பெற்று அதற்கு ஏற்ற பதில் நடவடிக்கைக்களை எடுக்கவைப்பது மூளைதான். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலைச் செய்பவர். இந்த மூளையைப் பற்றி மற்றொரு சமயம் விரிவாகச் சொல்றேன்.
என்னங்க, டாபிக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது போல இருக்குதுல. . அதற்கும் நம்ம மனசுதான் காரணம்.
விஞ்ஞான முறைப்படி மூளைதான் மனசு என்பார்கள். மெய்ஞ்ஞானப்படி பார்த்தால் மனசு அதற்கும் மேல். ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, இப்படி நாம் பலவற்றை அறிவோம்.
மனசுங்கிறது தாவித் தாவி போறதுனால குரங்கு மனசுன்னு சொல்றது உண்டு "தத்தித்தாவுது மனமே...., அலைபாயுதேன்னு" நாம் பாட்டுப் பாடுறதும் உண்டு. இதுவரைக்கும் வாசித்த உங்களுக்கு இப்போ தனிமனம்னா என்னன்னு நிச்சம் புரிய ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்ததா நாம் பார்க்குறது ஆழ்மனம்! விஞ்ஞானரீதியா சொன்னா subconscious mind/ state . அது எப்படி இருக்கும்? அதன் தன்மை என்ன என்பதை நீங்கதான் சொல்லப் போறீங்க . ஒரு சின்ன உதாரணம்.
"நம்ம வீ.எம் இருக்காரே அலாரமே வைக்காம காலை-ல 5 மணிக்கெல்லாம் டான்னு எந்திருச்சிருவாருடா, எப்படித்தான் முடியுதோ..நமக்கெல்லாம் உச்சிவெயில் நெத்தியில் பட்டால்தான் முழிப்பே வருது"
"பேய் பிசாசு மேல எனக்கு நம்பிக்கை இல்லைதான் இருந்தாலும் , ராத்திரி 2.30 மணிக்கு இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு வரச்சே இருட்டுல ஏதாவது அசஞ்சா கூட குப்புன்னு வேர்க்குது மச்சி"
" அட மாப்ளே! நீயாவது பரவாயில்ல! அன்னைக்கு அந்த பஸ் ஆக்ஸிடன்ட்டை பார்த்ததில் இருந்து எனக்கு பஸ்ஸைகண்டாலே எமனைப் பார்ப்பது போல இருக்குதுப்பா"
மேற்சொன்னவை நமக்கு மிகப்பழக்கமான வசனங்கள்தான். இது எப்படி சாத்தியம்?
நமது தனிமனம் ஓய்வு எடுக்கக்கூடியது , அலசி ஆராயும் தன்மையுடையது.
"ராம் இது சரி! இது தவறு! நீ இப்படி போகாதே! இதையே செய்" என்றெல்லாம் நமக்குள் ஒலித்து/ஒளிந்து கொண்டு இருக்கும் மனசாட்சியின் வேலையை செய்வது இதுதான் எனலாம். மனசாட்சியும் இதுவும் ஒன்றெனவும் கொள்ளலாம்.
ஆனால் ஆழ்மனம் அப்படியில்லை. இதற்கு ஓய்வே கிடையாது. நாம் உறங்கிக் கொண்டு இருந்தாலும் ஆழ்மனம் விழித்துக்கொண்டு இருக்கும். இதற்கு நல்லது கெட்டது தெரியாது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இதில் பதிவுச் செய்யப்படுகிறது.
ஆழ்மனம் வித்தியாசமானது.. எதை விதைகிறோமோ அதை அப்படியே அறுவடை செய்யக் கூடியது. கர்மா விதி மாதிரி..இதில் நாம் நெல்லைப் போட்டா நெல்லு முளைக்கும்! புல்லை போட்டால் புல்லுதான் முளைக்கும்(அப்ப குவார்ட்டர் போட்டா என்னன்னு யாரும் இங்கே கேள்வி கேட்கப் பிடாதாங்கும்), நெருஞ்சி முள்ளைப்போட்டா முள்ளுதான் முளைக்கும்.
எதைக் கேட்டாலும் தரக்கூடிய இந்த ஆழ்மனதின் ஆழத்தை நாம் உணர்வது இல்லை. அதை உணர்ந்திட நாம் முயல்வதும் இல்லை.
தத்துவமசி, நீயே அது, உன்னையே நீ அறிவாய் போன்ற தத்துவங்கள் எல்லாம் இதற்குள் அடக்கம். "சரி ராமா! இதெல்லாம் இந்த ஜெயமே ஜெயத்தில எதுக்குன்னு கேட்கிறீங்களா?"
அடுத்த ஜெயத்தில் சொல்கிறேன்!
மனம் பற்றி அறியும் முன், நாம் உண்மையிலேயே மனம் திறந்து அதைப்பற்றி அறியத்தயாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மூன்று வகை மனம் பற்றி நாம் அறிவோம்.
1. தனிமனம்
2. ஆழ்மனம்
3. பிரபஞ்ச மனம்.
இதைப்பற்றி சுருக்கமா சொல்லுறதுங்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். பயிற்சி மூலமாகத்தான் இதை உணரமுடியுமே தவிர வெறும் படிப்பு மூலமா உணர முடியாதுதான் . இருந்தாலும் மேலோட்டமா இப்ப தெரிஞ்சுக்கிட்டா பின்னாளில் உபயோகப்படும். அதுசரி! எல்லோர்க்கும் பள்ளியில் இதைப் போன்ற அனுபவம் வெவ்வேறாய் இருந்திருக்கும்.
ஆசிரியர்: என்னடா நான் சொன்னது காதுல நுழைஞ்சிச்சா?
மாணவன்: சார்! வால் மட்டும் நுழையிலே சார்!
ஆசிரியர்: ???? :-(
தனிமனம் என்பது conscious mind/state.. நாம இப்போ நினைச்சிட்டு இருக்கிறது. உதாரணமா இந்த நிமிஷம் இதைப்படிச்சிட்டு இருக்கும் போதே நம்ம சிந்தனை வீட்டை நோக்கிப் போகும் ...
"ஆபீஸ் விட்டு வரும்போது டெய்லர் கடையில தைக்க கொடுத்த துணியை வாங்கிட்டு வந்திடுன்னு அம்மா சொன்னாங்களே... "
"போன வெள்ளிக்கிழமை மீனா என்னைப் பார்த்து சிரிச்சாளே :) எதுக்கு சிரிச்சா? அதுவா இருக்குமோ?"
"சேச்சே நம்ம PL -லோட பெரும் ரோதனையா போய்ச்சே , மனுசன் பிராணனை வாங்குறானே!"
இப்படியாக நமது சிந்தனை ஒரு ரவுண்ட அடித்தபடியே இருக்கும். அதே சமயம் உங்கள் வேலையையும் கவனித்து கொள்வீர்கள். இந்தக் கட்டுரையையும் படித்துக் கொள்வீர். இன்னும் அழகாகச் சொல்லப்போனால் உணர்வு நிலையில் உள்ள மனம் அல்லது விழிப்புநிலை எனலாம். நமது ஐம்புலங்களின் செயல்பாட்டுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
அதே சமயம் இவங்களுக்கெல்லாம் கெட் ஆபீஸ், நம்ம கேப்டன் மூளைதான். மனசு பற்றி பேசும் போது மூளை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்த ஐம்புலங்களின் உணர்வுகளின் தகவலைப்பெற்று அதற்கு ஏற்ற பதில் நடவடிக்கைக்களை எடுக்கவைப்பது மூளைதான். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலைச் செய்பவர். இந்த மூளையைப் பற்றி மற்றொரு சமயம் விரிவாகச் சொல்றேன்.
என்னங்க, டாபிக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது போல இருக்குதுல. . அதற்கும் நம்ம மனசுதான் காரணம்.
விஞ்ஞான முறைப்படி மூளைதான் மனசு என்பார்கள். மெய்ஞ்ஞானப்படி பார்த்தால் மனசு அதற்கும் மேல். ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, இப்படி நாம் பலவற்றை அறிவோம்.
மனசுங்கிறது தாவித் தாவி போறதுனால குரங்கு மனசுன்னு சொல்றது உண்டு "தத்தித்தாவுது மனமே...., அலைபாயுதேன்னு" நாம் பாட்டுப் பாடுறதும் உண்டு. இதுவரைக்கும் வாசித்த உங்களுக்கு இப்போ தனிமனம்னா என்னன்னு நிச்சம் புரிய ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்ததா நாம் பார்க்குறது ஆழ்மனம்! விஞ்ஞானரீதியா சொன்னா subconscious mind/ state . அது எப்படி இருக்கும்? அதன் தன்மை என்ன என்பதை நீங்கதான் சொல்லப் போறீங்க . ஒரு சின்ன உதாரணம்.
"நம்ம வீ.எம் இருக்காரே அலாரமே வைக்காம காலை-ல 5 மணிக்கெல்லாம் டான்னு எந்திருச்சிருவாருடா, எப்படித்தான் முடியுதோ..நமக்கெல்லாம் உச்சிவெயில் நெத்தியில் பட்டால்தான் முழிப்பே வருது"
"பேய் பிசாசு மேல எனக்கு நம்பிக்கை இல்லைதான் இருந்தாலும் , ராத்திரி 2.30 மணிக்கு இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு வரச்சே இருட்டுல ஏதாவது அசஞ்சா கூட குப்புன்னு வேர்க்குது மச்சி"
" அட மாப்ளே! நீயாவது பரவாயில்ல! அன்னைக்கு அந்த பஸ் ஆக்ஸிடன்ட்டை பார்த்ததில் இருந்து எனக்கு பஸ்ஸைகண்டாலே எமனைப் பார்ப்பது போல இருக்குதுப்பா"
மேற்சொன்னவை நமக்கு மிகப்பழக்கமான வசனங்கள்தான். இது எப்படி சாத்தியம்?
நமது தனிமனம் ஓய்வு எடுக்கக்கூடியது , அலசி ஆராயும் தன்மையுடையது.
"ராம் இது சரி! இது தவறு! நீ இப்படி போகாதே! இதையே செய்" என்றெல்லாம் நமக்குள் ஒலித்து/ஒளிந்து கொண்டு இருக்கும் மனசாட்சியின் வேலையை செய்வது இதுதான் எனலாம். மனசாட்சியும் இதுவும் ஒன்றெனவும் கொள்ளலாம்.
ஆனால் ஆழ்மனம் அப்படியில்லை. இதற்கு ஓய்வே கிடையாது. நாம் உறங்கிக் கொண்டு இருந்தாலும் ஆழ்மனம் விழித்துக்கொண்டு இருக்கும். இதற்கு நல்லது கெட்டது தெரியாது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இதில் பதிவுச் செய்யப்படுகிறது.
ஆழ்மனம் வித்தியாசமானது.. எதை விதைகிறோமோ அதை அப்படியே அறுவடை செய்யக் கூடியது. கர்மா விதி மாதிரி..இதில் நாம் நெல்லைப் போட்டா நெல்லு முளைக்கும்! புல்லை போட்டால் புல்லுதான் முளைக்கும்(அப்ப குவார்ட்டர் போட்டா என்னன்னு யாரும் இங்கே கேள்வி கேட்கப் பிடாதாங்கும்), நெருஞ்சி முள்ளைப்போட்டா முள்ளுதான் முளைக்கும்.
எதைக் கேட்டாலும் தரக்கூடிய இந்த ஆழ்மனதின் ஆழத்தை நாம் உணர்வது இல்லை. அதை உணர்ந்திட நாம் முயல்வதும் இல்லை.
தத்துவமசி, நீயே அது, உன்னையே நீ அறிவாய் போன்ற தத்துவங்கள் எல்லாம் இதற்குள் அடக்கம். "சரி ராமா! இதெல்லாம் இந்த ஜெயமே ஜெயத்தில எதுக்குன்னு கேட்கிறீங்களா?"
அடுத்த ஜெயத்தில் சொல்கிறேன்!