PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Monday, April 25, 2005

இதுதாண்டா காதல்!

காதலாம் காதல்...?
யாரடா சொன்னது-அந்த

மூன்றெழுத்து மூதேவியை!
பஸ்சிலே நின்றுகொண்டு பார்க்கும்
பத்தாம் பசலி

காதல் எல்லாம் காதல் அல்ல!
கிஸ் என்று
கேட்டு அலையும்
கேடு கெட்ட
காதல் எல்லாம் காதல் அல்ல!
இலக்கியக் காதலெல்லாம்

இன்றைக்கு எடுபடாது!
'கண்டதும் காதல்'
என்பதெல்லாம் கட்டுக்கதை!
காதல்..

உள்ளத்தில் ஊறிவரும்
உணர்வுகள்தான் பேசும்!
காதல்..
கட்டாயம் வர வேண்டும்,
கல்யாணம் ஆன பின் வரவேண்டும்,
அதுவும்..
தான் கட்டிய மனைவியோடு
மட்டும்தான் வர வேண்டும்..
அதுதாண்டா காதல்!

0 Comments:

Post a Comment

<< Home